க1ர்மண்யக1ர்ம ய: ப1ஶ்யேத3க1ர்மணி ச1 க1ர்ம ய: |
ஸ புத்3தி4மான்மனுஷ்யேஷு ஸ யுக்த1: க்1ருத்1ஸ்னக1ர்மக்1ருத்1 ||
18 ||
கர்மணி--—செயல்களில்; அகர்ம--—செயலற்ற நிலையை; யஹ--—யார்; பஶ்யேத்--—பார்க்கிறாரோ; அகர்மணி—செயலற்ற தன்மையில்; ச--—மேலும்; கர்ம—--செயலை; யஹ--—யார்; ஸஹ---—அவர்கள்; புத்தி-மான்—--ஞானி; மனுஷ்யேஷு—--மனிதர்களிடையே; ஸஹ--—அவர்; யுக்தஹ—--யோகிகள்; க்ருத்ஸ்ன---கர்ம-க்ருத்—-எல்லா வகையான செயல்களையும் செய்பவர்
BG 4.18: செயலில் செயல் இன்மையையும் செயலின்மையில் செயலையும் பார்ப்பவர்கள் உண்மையிலேயே மனிதர்களில் ஞானமுள்ளவர்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும், அவர்கள் யோகிகள் மற்றும் அவர்கள் எல்லா செயல்களிலும் வல்லவர்கள்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
செயலற்ற நிலையில் செயல்: தங்கள் சமூகக் கடமைகளை அலட்சியப் படுத்தி பாரமாக கருதி துறந்து விடுவது ஒருவகையான செயலற்ற தன்மை. இவ்வாறு உடல்ரீதியாக செயல்களை கைவிடும் போது அவர்களின் மனம் புலன்களின் பொருட்களை தொடர்ந்து சிந்திக்கிறது. அத்தகைய நபர்கள் செயல் அற்றவராக தோன்றினாலும் அவர்கள் மந்தமான செயலற்ற நிலையில் இருப்பது உண்மையில் பாவச்செயலாகும். அர்ஜுனன் தனது போரைச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து விலகிச் செல்ல விரும்புவதாகக் கூறியபோது, ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு செய்வது பாவம் என்றும், அத்தகைய செயலற்ற தன்மைக்காக அவர் நரகத்திற்கு செல்வார் என்றும் அவருக்கு விளக்கினார்.
செயலில் செயலற்ற தன்மை: கர்ம யோகிகள் செய்யும் மற்றொரு வகையான செயலற்ற தன்மை உள்ளது. அவர்கள் தங்கள் சமூகக் கடமைகளை முடிவுகளின் மீது பற்று இல்லாமல் செய்கிறார்கள், தங்கள் செயல்களின் பலனை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். எல்லாவிதமான செயல்களிலும் ஈடுபட்டாலும், அவர்கள் கர்ம வினைகளில் சிக்குவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு தனிப்பட்ட இன்பத்திற்கான எந்த நோக்கமும் இல்லை. இந்திய வரலாற்றில் த்ருவ், ப்ரஹலாத், யுதிஷ்டிரர், ப்ருது, மற்றும் அம்பரீஷ் போன்ற பல சிறந்த மன்னர்கள் இருந்தனர், அவர்கள் தங்களின் அரச கடமைகளை சிறந்து ஆற்றினர். இருப்பினும், அவர்களின் மனம் பொருள் ஆசைகளில் சிக்காததால், அவர்களின் செயல்கள் செயலற்றவை அல்லது அகர்ம் என்று அழைக்கப்பட்டன. அகர்மத்தின் மற்றொரு பெயர் கர்மயோகம் இது முந்தைய இரண்டு அத்தியாயங்களிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.